பக்கங்கள்

பக்கங்கள்

11 ஜன., 2022

பிரான்சில் தொடர்ந்து அதிகரிக்கும் சாவுகள் - 280 கொரோனாச் சாவு

www.pungudutivuswiss.com
தொடர்ந்து கொரோனாச் சாவுகள் அதிகரித்த வண்ணமே உள்ளன.
மீண்டும் கடந்த 24 மணிநேரத்தில் 280 பேர் சாவடைந்துள்ளனர். இதனுடன் பிரான்சில் மொத்தமாக 125.718 பேர் கொரோனாவினால் சாவடைந்துள்ளனர்.
இதில் 98.579 (+280) பேர் வைத்தியசாலைகளிலும், 27.139 பேர் சமூக மற்றும் முதியோர் இல்லங்களில் சாவடைந்துள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆய்வுகூடங்களும் பெருமளவான மருந்தகங்களும் மூடியிருந்த நிலையில் மிகவும் சொற்பமான கொரோனாப் பரிசோதனைகளே நிகழ்ந்திருக்கும் நிலையிலும்
கடந்த 24 மணிநேரத்தில் 93.896 பேரிற்குக் கொரோனத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று ஆரம்பித்ததில் இருந்து, பன்னிரண்டு மில்லியனைத் தாண்டி 12.205.114 பேரிற்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.