பக்கங்கள்

பக்கங்கள்

17 செப்., 2022

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் மைத்திரியும் சந்தேக நபர்! - நீதிமன்றம் உத்தரவு.

www.pungudutivuswiss.com



ஈஸ்டர் ஞாயிறு  தாக்குதல் தொடர்பான தனிப்பட்ட மனு தொடர்பில் ஒக்டோபர் 14ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான தனிப்பட்ட மனு தொடர்பில் ஒக்டோபர் 14ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது

அத்துடன், குறித்த தனிநபர் மனுவில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தேக நபராக பெயரிட நீதிவான் திலின கமகே தீர்மானித்துள்ளார்.

அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ மற்றும் ஜேசுராஜ் கணேசன் ஆகியோர் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக, குற்றவியல் சட்டத்தின் 298 பிரிவின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி தனிப்பட்ட மனுவினை தாக்கல் செய்துள்ளன