காணிகளை விடுவிக்க கோரி தெல்லிப்பழையில் மாபெரும் போராட்டம்
www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பகுதியிலுள்ள காணிகளை விடுவிக்க கோரி தெல்லிப்பழை சந்தியில் இன்று பாரிய கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் போராட்டம் இடம் பெற்றது
போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டுள்ளதுடன் மத குருமார்கள் சிவில் சமூகத் தலைவர்கள் பொதுமக்கள் அரசியல்வாதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.