பக்கங்கள்

பக்கங்கள்

7 ஜன., 2023

தனித்தா- கூட்டாகவா போட்டி - 17ஆம் திகதியே தீர்மானம்!

www.pungudutivuswiss.com



உள்ளூராட்சிமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டணியாக போட்டியிடுவதா என்பது தொடர்பாக தைப்பொங்கலுக்குப் பின்னர் 17 ஆம் திகதியே தமது தீர்மானத்தை அறிவிக்க காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.


உள்ளூராட்சிமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டணியாக போட்டியிடுவதா என்பது தொடர்பாக தைப்பொங்கலுக்குப் பின்னர் 17 ஆம் திகதியே தமது தீர்மானத்தை அறிவிக்க காங்கிரஸ் தீர்மானித்துள்ளது

உள்ளூராட்சிமன்ற தேர்தல் குறித்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட உறுப்பினர்களுடன் கட்சியின் தலைமையகமான சௌமியபவனில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் ஒவ்வொரு மாகாணங்களிலும், மாவட்டங்களிலும் உள்ள வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிட உள்ள எல்லைக்கு உட்பட்ட வட்டாரங்களில் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளதாக மாவட்ட பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

மேலும் தேர்தலில் தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டணியாக போட்டியிடுவதா என்பது தொடர்பாக பல கோணங்களில் ஆராயப்பட்டது. இறுதி தீர்மானம் இம்மாதம் 17 ஆம் திகதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் குழு, வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான குழு,பிரசார குழு என மூன்று குழுக்கள் இதன் போது நியமிக்கப்பட்டுள்ளன