பக்கங்கள்

பக்கங்கள்

3 ஜன., 2023

மார்ச் 4ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தல்?

www.pungudutivuswiss.com



உள்ளூராட்சி சபைத் தேர்தலை மார்ச் 04 ஆம் திகதி நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு ஆராய்ந்துள்ளது. தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் விசேட கூட்டம் இன்று கொழும்பில் நடைபெற்றது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை மார்ச் 04 ஆம் திகதி நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு ஆராய்ந்துள்ளது. தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் விசேட கூட்டம் இன்று கொழும்பில் நடைபெற்றது.

இதன்போது மார்ச் 10 ஆம் திகதிக்குள் தேர்தலை நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டதுடன், தேர்தலை மார்ச் 4 ஆம் திகதி நடத்துவது பற்றியும் ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன், உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனு கோரல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாளை வெளியிடப்படவுள்ளது.

பிரதேச சபைகள், நகர சபைகள் மற்றும் மாநகர சபைகள் என 340 உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் ஓராண்டுகாலம் நீடிக்கப்பட்டது. இதன்படி 2023 மார்ச் 20 ஆம் திகதிக்குள் புதிய சபைகள் நிறுவப்பட வேண்டும்.

அதேபோல் தேர்தலை நடத்துவதற்கான நிதியையும், திறைசேரியிடமிருந்து தேர்தல் ஆணைக்குழு கோரியுள்ளது.