 சைக்கிள்கட்சி மக்களிடம் ஆதரவில்லாமல் உள்ளது என்பதை ஒத்துக்கொண்டார்களா நாங்கள் தான் இனி தமிழீழத்தின் ஏகபிரதிநிதிகள் ஈழ தேசியவாதிகள் மற்றவர்கள் எல்லாம் துரோகிகள் மக்கள் இனம் கண்டுள்ளார்கள் என்ற தோரணையில் பிரசாரம் செய்யது கொண்டு திரிந்த சைக்கிள் அணியினர் வெறும் இரண்டே இரண்டு சபைகளில் மட்டுமே போட்டியிட உள்ளமை எதனை காட்டுகிறது .சரியான கடடமைüüüஇல்லை. மக்களிடம் ஆதரவில்லை கட்சிக்கென பணமில்லை பல சபைகளில் ஈ பி டி பி க்கு ஆதரவு நிலை எடுத்த வியூகத்த்தில் ஏதும் உடன்பாடோ என எல்லாம் கேட்க தோன்றுகிறது .புலம்பெயர் புலிகளின் ஆதரவும் நிதி உதவியும் கிடைப்பதாக சொல்லப்படும் கட்சி . இலங்கையின் மாபெரும் நிதி கடன் வழங்கும் வங்கியில் முதல் பத்து பங்குதாரர்களில் ஒருவரான பொன்னம்பலமிடம் நி தியில்லையா என விமர்சிக்கிறார்கள் யாழ்ப்பாணத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 17 சபைகளுக்கு கட்டுப்பணம் செலுத்திய போதும், 2 சபைகளுக்கான வேட்புமனுக்களை மாத்திரமே இன்று மதியம் தாக்கல் செய்துள்ளது. சட்டத்தரணி ந.காண்டீபன், தீபன் திலீசன் தலைமையிலான குழுவினர் பருத்தித்துறை நகரசபை மற்றும் சாவகச்சேரி நகரசபை ஆகிய சபைகளுக்கான வேட்புமனுவை இன்று யாழ்ப்பாணத்தில் தாக்கல் செய்தனர் |