பக்கங்கள்

பக்கங்கள்

11 மே, 2023

விளையாடிக் கொண்டிருந்த சிறுமி கிணற்றில் தவறி விழுந்து மரணம்

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணம்- இளவாலை வசந்தபுரம் பிரதேசத்தில் வீட்டுத் தோட்டத்தில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றுக்குள் விழுந்து இரண்டரை வயதான சிறுமி மரணமடைந்துள்ளார் என்று இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம்- இளவாலை வசந்தபுரம் பிரதேசத்தில் வீட்டுத் தோட்டத்தில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றுக்குள் விழுந்து இரண்டரை வயதான சிறுமி மரணமடைந்துள்ளார் என்று இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்

சிறுமியின் தந்தை தொழிலுக்காக சென்றிருந்த போது, தாய், சமையல் செய்து கொண்டிருந்துள்ளார். வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி, கிணற்றுக்குள் விழுந்துள்ளார்.

சத்தம் கேட்டு கிணற்றடிக்கு சென்ற தாய், கிணற்றுக்குள் குழந்தை கிடப்பதை கண்டு, அபாய குரல் எழுப்பி உதவிக்காக அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார்.

அவர்களின் உதவியுடன் சிறுமியை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போதிலும், சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இரண்டரை வயதான கருணாநிதி ரக்ஷிகா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்