பக்கங்கள்

பக்கங்கள்

9 செப்., 2023

நடந்தாய் வாழி வழுக்கை ஆறு! - யாழ்ப்பாணத்தில் நடைபயணம்.

www.pungudutivuswiss.com

"நடந்தாய் வாழி வழுக்கை ஆறு" எனும் தொனிப்பொருளில் வழுக்கியாற்றின் வழிதோறும் உள்ள குளங்களை காணும் ஒரு நடைபயணம் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இன்று காலை 8 மணிக்கு யாழ். தெல்லிப்பழையில் இருந்து ஆரம்பமான இந்த பயணம் அராலி நோக்கி சென்றது.

இந்த பயணத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி பேராசிரியர் சுரேந்திரகுமார், சுவீடன் விவசாய பல்கலைக்கழக தகைநிலை பேராசிரியர் ஸ்ரீஸ்கந்தராசா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.