முதலில் ஜனாதிபதி தேர்தல்- தயாராகுமாறு ரணில் அறிவிப்பு
www.pungudutivuswiss.com
ஜனாதிபதி தேர்தல் முதலில் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது
எனவே முதலில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு அமைச்சரவை அமைச்சர்களுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார். அரசியலமைப்பின் பிரகாரம் முதலில் அதிபர் தேர்தலை நடத்த வேண்டும். எனவே அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.