பக்கங்கள்

பக்கங்கள்

23 மே, 2024

தேர்தல் அறிவிக்கப்படும் வரை பொது வேட்பாளர் குறித்து முடிவெடுப்பதில்லை என தமிழரசு முவு!

www.pungudutivuswiss.com



ஜனாதிபதி  தேர்தல் அறிவிக்கப்படும் வரை பொது வேட்பாளர் தொடர்பாக எந்த முடிவையும் எடுப்பதில்லை என  இலங்கை தமிழ் அரசுக் கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் சி.வி.கே.சிவஞானம் கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படும் வரை பொது வேட்பாளர் தொடர்பாக எந்த முடிவையும் எடுப்பதில்லை என இலங்கை தமிழ் அரசுக் கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் சி.வி.கே.சிவஞானம் கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கூடிய மத்திய குழு கூட்டத்திலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களால் கோடிட்டுக் காட்டப்பட வேண்டிய கொள்கைகளைப் பார்க்கும். அவர்கள் வெளியிடும் தேர்தல் அறிக்கையை பார்த்து முடிவு எடுப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.