பக்கங்கள்

பக்கங்கள்

4 மே, 2024

ரணில் - பசில் இன்று மீண்டும் சந்திப்பு

www.pungudutivuswiss.com


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவுக்கும் இடையில் இன்று  விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
கொழும்பு – மஹகமசேகர மாவத்தையில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவுக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. கொழும்பு – மஹகமசேகர மாவத்தையில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் அதற்கான உடன்பாடுகளை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரியவருகிறது. பசில் ராஜபக்ச அமெரிக்காவில் இருந்து தாயகம் திரும்பிய பின்னர் இருவருக்கும் இடையில் ஐந்தாவது தடவையாக இடம்பெறும் சந்திப்பு இது.