பக்கங்கள்

பக்கங்கள்

1 மே, 2025

சுவிஸ் தூதுவரின் இல்லத்தில் 4.5 மில்லியன் ரூபா நகைகள் திருட்டு! [Wednesday 2025-04-30 18:00]

www.pungudutivuswiss.com


இலங்கைக்கான சுவிஸ் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் உள்ள பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் நான்கரை மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட தங்க மோதிரங்கள், கழுத்தணிகள் மற்றும் பதக்கங்கள் திருடப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கைக்கான சுவிஸ் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் உள்ள பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் நான்கரை மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட தங்க மோதிரங்கள், கழுத்தணிகள் மற்றும் பதக்கங்கள் திருடப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்

சுவிஸ் தூதுவர் கொள்ளுப்பிட்டி பொலிஸில் செவ்வாய்க்கிழமை (29) செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.

சுவிட்சர்லாந்து தூதுவர் கடந்த 12 ஆம் திகதி சுவிட்சர்லாந்துக்குப் புறப்பட்டு, 27 ஆம் திகதி இலங்கைக்குத் திரும்பினார். அந்தக் காலகட்டத்தில், அவரது ஐந்து ஊழியர்கள் பணியில் இருந்தனர், மேலும் கொள்ளுப்பிட்டி பொலிஸார் அந்த ஊழியர்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.

தனது அதிகாரப்பூர்வ இல்லத்தின் மேல் தளத்தில் உள்ள ஒரு அறையில் இருந்த ஒரு பெட்டகத்திலிருந்து வைர மோதிரம், உயர்ந்த ரத்தினக் கல் கொண்ட மோதிரம், பச்சைக் கல் மற்றும் தங்க நெக்லஸ் கொண்ட மோதிரம், வெள்ளைத் தங்க அடித்தளத் தகடு, தங்கத் திருமண மோதிரம், ரூபி கல் கொண்ட தங்க மோதிரம், தங்கப் பதக்கம், சபையர் கற்கள் கொண்ட ஒரு ஜோடி தங்கக் காதணிகள், ஒமேகா லேடிமேடிக் கடிகாரம் மற்றும் ஒமேகா தங்கக் கடிகாரம் உள்ளிட்ட தங்கப் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக தூதுவர், பொலிஸில் செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது