சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலங்கள் அகற்றப்பட்டு புதிய பாலங்கள் அமைக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஐந்து பாலங்கள் ஏற்கனவே நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்திய கடன் உதவியுடன் ஐந்து பாலங்கள் அமைக்கப்படவுள்ளதோடு, சுமார் 15 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும். பொசன் பௌர்ணமி தினத்துக்கு பின்னர் கட்டுமாணப்பணிகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளன. இந்திய கடன் திட்டத்தின் கீழ் 9,127 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இந்த புகையிரத மார்க்கம் புனரமைக்கப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திறக்கப்பட்ட போதிலும், சமிக்ஞை கட்டமைப்பின் கட்டுமானம் தாமதமாகி வருகிறது. சமிக்ஞைகள் இல்லாததால், தற்போது அந்தப் பகுதியில் டோக்கன் முறையில் புகையிரதங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியாவுடன் கையெழுத்திட திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த மாதத்திற்குள் சமிக்ஞை கட்டமைப்பின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டால் அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் பணிகளை முடிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். |