பக்கங்கள்

பக்கங்கள்

4 செப்., 2012


மகிந்த ராஜபக்சவின் இந்திய விஜயம்! சுஷ்மாவுக்கு வைகோ எச்சரிக்கை
மத்திய பிரதேசத்தில் நடக்கும் விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சவை அழைத்து வருவதாகக் கூறிய பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார். 
ராஜபக்சேவை இந்தியாவுக்கு அழைத்து வருவேன் என்பதா? சுஷ்மாவுக்கு வைகோ எச்சரிக்கை
நெல்லை மாவட்டத்தில் நடந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்ட வைகோ பேசியதாவது,
மதிமுக இனி வரும் காலங்களில் கவனமாக அடி எடுத்து வைப்பதுடன் ஒவ்வொரு முடிவும் வெற்றிகரமாக அமைந்திடும் வகையில் செயல்படும்.
பாஜவை சேர்ந்த சுஷ்மா ஸ்வராஜ் மத்திய பிரதேசத்தில் சாஞ்சியில் நடைபெற உள்ள புத்தர் 2060வது விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சவை அழைத்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இது கண்டனத்திற்குரியது.
காங்கிரஸ் செய்த தவறை பாஜகவும் செய்தால் அக்கட்சியின் மீதும் எங்களது வெறுப்பினை காட்ட வேண்டிய சூழல் உருவாகும்.
இலங்கை தமிழர்களுக்காக சென்னையில் போராட்டம் நடத்தினால் என்னையும் அழையுங்கள் வருகிறேன் என்று கூறிய ஜஸ்வந்த சிங் உள்ளிட்ட பல நல்ல தலைவர்கள் உள்ள நிலையில் ராஜபக்சவை இந்தியாவுக்கு அழைத்து வருவதாகக் கூறிய சுஷ்மாவை எச்சரிக்கிறேன் என்றார்.