பக்கங்கள்

பக்கங்கள்

19 நவ., 2012


47 நாடுகளின் தூதர்களை சந்தித்து டெசோ மாநாட்டு தீர்மானம் குறித்து வலியுறுத்த முடிவு 


திமுக தலைவர் கலைஞர் தலைமையில் டெசோ கலந்துரையாடல் கூட்டம் இன்று (19.11.2012) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின், சுப.வீரபாண்டியன், திருமாவளவன், கி.வீரமணி, பேராசிரியர் க.அன்பழகன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. ஐ.நா. மனித உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் 47 உறுப்பு நாடுகளின் இந்தியாவிற்கான தூதர்களை டெசோ சார்பில் சந்தித்து, டெசோ மாநாட்டு தீர்மானங்களுக்கு ஆதரவாக ஐ.நா. மனித உரிமை பாதுகாப்பு ஆணையத்தில் குரல் கொடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.