பக்கங்கள்

பக்கங்கள்

8 நவ., 2012

யாழ்ப்பாணம், சங்குவேலி பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து வயோதிபரின் சடலம் ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. 
சங்குவேலியைச் சேர்ந்த எஸ்.சிவகுரு வயது 65 என்பவரே கிணற்றில் இருந்து இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அயலவர்கள் காலையில் குறிப்பிட்ட நபரை வீட்டில் காணாது தேடியுள்ளனர். இதனைத் தொடர்ந்து கிணற்றில் நீர் அள்ளச் சென்றவர்கள் வயோதிபர்

சடலமாக மிதப்பதைக் கண்டு மானிப்பாய் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

மானிப்பாய் பொலிசார் மல்லாகம் நீதிமன்றத்திற்கு தகவல் வழங்கியதையடுத்து குறிப்பி;ட்ட இடத்திற்குச் சென்ற நீதிபதி விசாரணைகளை மேற்கொண்டார்.


சடலத்தை கிணற்றில் இருந்து மீட்ட பொலிசார் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.