பக்கங்கள்

பக்கங்கள்

20 ஏப்., 2013


36 இலங்கையர்களுக்கு எதிராக சர்வதேச பிடிவிராந்து உத்தரவு
பயங்கரவாத நடவடிக்கைகள், போலி காணி உறுதி தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 36 இலங்கையர்களுக்கு எதிராக சர்வதேச பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம்கள் இந்தப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் சட்டத்தரணி எனத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள், விடுதலைப் புலிகள் இயக்கத்திற்காக பணம் திரட்டியவர்கள், செலிங்கோ குழும நிறுவனத்தின் முன்னாள் தலைவர் லலித் கொதலாவலவின் மனைவி உள்ளிட்டோருக்கு எதிராக சர்வதேச பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.