பக்கங்கள்

பக்கங்கள்

25 ஜூன், 2013

பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்பது தொடர்பிலான இறுதித் தீர்மானம் இன்னமும் எடுக்கப்படவில்லை என கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச் சட்டத்தை திருத்தியமைப்பது குறித்து ஆராயும் நோக்கில் அரசாங்கம் பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை நிறுவியுள்ளது.

31 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் ஆளும் கட்சி பிரதிநிதிகள் 19 பேரையும் சபாநாயகர் சமால் ராஜபக்ஷ ஏற்கனவே பெயரிட்டுள்ளார்.

இந்தக் குழுவிற்கு அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமை தாங்குகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டால் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இணைந்து கொள்ள முடியும் என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.