பக்கங்கள்

பக்கங்கள்

19 ஜூலை, 2013


மறைந்த கவிஞர் வாலியின் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி!
பிரபல கவிஞர் வாலி சென்னையில் உடல்நலக் குறைவால் 18.07.2013 வியாழன் மாலை காலமானார். 
மறைந்த வாலியின் உடல் சென்னை, எம்.ஆர்.சி. நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. வாலியின் மறைவை கேட்டு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலையும், அஞ்சலியையும் செலுத்தி வருகின்றனர். 
திரைப்பட இயக்குநர் பாலச்சந்தர், கேமரா மேன் ஸ்ரீராம், இசையமைப்பாளரும், இயக்குநருமான கங்கைஅமரன், சங்கர் கணேஷ், இசையமைப்பாளர்கள் தேவா, ஸ்ரீகாந்த் தேவா உட்பட திரையுலகினர் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
அவரது இறுதிசடங்கு 19.07.2013 வெள்ளிக்கிழமை சென்னை பெசன்ட் நகர் மின்மயானத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.