பக்கங்கள்

பக்கங்கள்

3 ஜூலை, 2013

நவநீதம்பிள்ளை முள்ளிவாய்க்கால் செல்லக்கூடாது! கடும் நிபந்தனைகளுடன் அனுமதிப்பதற்கு அரசு தீர்மானம்


வரும் ஆகஸ்ட் மாதம்  இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள  ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை சில கட்டுப்பாடுகளுடனேயே நாட்டுக்குள் அனுமதிப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக நம்பகமான செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் தங்கியிருக்கும் காலங்களில் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளை அவர் சந்திக்கக் கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதிக்குச் செல்வதற்கும் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளைச் சந்திக்கவும் நவநீதம்பிள்ளைக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, நவநீதம்பிள்ளையுடன் சேர்ந்து வரும் ஏனையோர் தொடர்பான தகவல்களையும் முன்கூட்டியே தங்களுக்கு அறிவிக்க வேண்டும் என்றும்  இலங்கை வெளிவிவகார அமைச்சு கேட்டுள்ளதாகவும் அந்தச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.