பக்கங்கள்

பக்கங்கள்

31 ஆக., 2013

இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை அவசியம்: ஐரோப்பிய ஒன்றியம்
இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பில்,, சர்வதேசம் ஏற்றுக்கொள்ளக்கூடிய விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளது.
இலங்கையின் தென்பகுதியில் 1970-1980 ஆண்டுக்களில் பலர் காணாமல் போயினர்.
இதனை தவிர போர் காலத்தின் போது அதிகமானோர் காணாமல் போயியுள்ளனர்.
இந்தநிலையில் குறித்த பிரச்சினையை ஆராய அண்மையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. எனினும் அந்தக்குழு உரியமுறையில் நீதியாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளது.
இதுவே நாட்டை முன்னேற்ற வழியில் இட்டுசெல்ல வழிவகுக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.