பக்கங்கள்

பக்கங்கள்

14 ஆக., 2013


கனடா பஸ் விபத்தில் காரைநகரைச் சேர்ந்த ஈழத்தமிழ் யுவதி பலி 
News Service
கனடா, ஸ்காபரோவில் Middlefield & Steeles Ave சந்திப்பில் நேற்றையதினம் 13/08/2013 காலை 11:30 மணியளவில் நடைபெற்ற கோர விபத்தில் மனோரஞ்சனா கனகசபாபதி எனும் யாழ்-காரைநகரைச் சேர்ந்த ஈழத்தமிழ் யுவதி கொல்லப்பட்டுள்ளார். இவ் பஸ் விபத்தின் போது 23 பேர் பஸ்ஸில் பயணம் செய்ததாகவும் 13 பேர் மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்கு எடுத்து செல்லப்பட்டதாகவும், இதில் 4 ஈழத்தமிழர்கள் காயமடைந்தாகவும் அறியப்படுகிறது.
காயமடைந்த பஸ் சாரதியை பொலிஸார் தொடர்ந்து விசாரித்து வருவதாகவும், விபத்து நடந்த போது சாரதி கைத் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. விபத்தில் கொல்லப்பட்ட மனோரஞ்சனா கனகசபாபதியின் இறுதிச்சடங்குகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.