பக்கங்கள்

பக்கங்கள்

9 செப்., 2013

மனிதஉரிமை ஆர்வலர்கள் மீதான அச்சுறுத்தல்! இன்றைய அமர்வில் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு எச்சரிக்கை
இலங்கையில் மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் தன்னை சந்தித்த சமூக ஆர்வலர்கள் தாக்கப்படுகின்றமை குறித்து நவநீதம்பிள்ளை இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐநா மனித உரிமை பேரவையின் 24 வது பருவகால அமர்வு இன்று ஆரம்பமான போது இலங்கை குறித்து உரையாற்றிய நவநீதம்பிள்ளை இவ்வாறு குறிப்பிட்டார்.
இலங்கையில் மனித உரிமை ஆர்வலர்களை பாதுகாக்கும்படி அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மனித உரிமைகள் விடயம் குறித்து ஐநா சபையுடன் இணைந்து பணியாற்றப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.