பக்கங்கள்

பக்கங்கள்

30 அக்., 2013

முதலமைச்சர் விக்னேஸ்வரன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி
வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என வைத்தியசாலையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வட மாகாண முதலமைச்சர் இருதய பரிசோதனைக்காக இன்று மதியம் 1.00 மணியளவில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு சென்றிருந்த நிலையில் இருதய சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி பவானி பசுபதிராஜா தெரிவித்தார்.
முதலமைச்சர் விக்னேஸ்வரன் தற்போது நலமாக உள்ளதாக தெரிவித்த பணிப்பாளர், இருதயப் பரிசோதனையின் பின்னர் 24 மணிநேரம் வைத்தியர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற இருப்பதால் அவர், வைத்தியசாலையில் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கியிருப்பதாகவும் கூறினார்.