பக்கங்கள்

பக்கங்கள்

16 அக்., 2013

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு வழிசெய்து தருமாறு வடமாகாண சபையிடம் கோரிக்கை!
போரில் உயிர் நீத்தவர்களுக்கும் மாவீரர் துயிலும் இல்லங்களில் புதைக்கப்பட்ட கல்லறைகளுக்கும், அவர்களுடைய உறவினர்களும் உரித்துடையவர்களும் அஞ்சலி செலுத்துவதற்கு வடக்கு மாகாண சபை வழி செய்து தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 குறித்த பிரேரணை சாவகச்சேரி பிரதேச சபையில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
சாவகச்சேரி பிரதேச சபையின் அமர்வுகள் தவிசாளர் சிற்றம்பலம் தலைமையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.
இதன்போது இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரதேச சபை உறுப்பினர் ஸ்ரீரஞ்சன் பிரேரணையை முன்பொழிய, உப தவிசாளர் அதனை வழிமொழிய பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
இருந்த போதிலும் குறித்த பிரேரணைக்கு உறுப்பினர் ச.ஞானலிங்கம் எதிர்ப்புத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.