பக்கங்கள்

பக்கங்கள்

24 நவ., 2013

மலேசியாவில் 1000இற்கும் மேற்பட்ட இலங்கையர் கைது
மலேசியாவில் ஆயிரத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியம் தெரிவித்துள்ளது.
சுற்றுலா வீசாவில் மலேசியா சென்று அங்கு தொழில் புரிந்த இலங்கையர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் மங்கள ரன்தெனிய குறிப்பிட்டார்.
மலேசியாவில் தினந்தோறும் 15 பேர் வரையில் சுற்றுலா வீசாவில் சென்று தொழில் செய்கின்றமை குறித்து மலேசியாவிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு தகவல்கள் கிடைக்கப் பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.