பக்கங்கள்

பக்கங்கள்

5 டிச., 2013

நெடுந்தீவு பிரதேசசபை தலைவர் கொலை! சந்தேகநபர்கள் மூவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு
நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் தானியல் றெக்சியனை (ரஜீவ்) கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட அவர்கள் நெடுந்தீவு நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களை எதிர்வரும் 17ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் எஸ். மகேந்திரராசா உத்தரவிட்டுள்ளார்.


அதன்படி கொலையுடன் தொடர்புடைய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் வடமாகாண சபையின் எதிர்கட்சித் தலைவருமான கந்தசாமி கமலேந்திரன், கொலை செய்யப்பட்ட நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் டானியல் றெக்சியனின் மனைவி றெக்சியன் அனிதா மற்றும் லண்டன் சசிந்திரன் ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இப்படுகொலை சம்பந்தமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நெடுந்தீவைச் சேர்ந்த சசிந்திரன் என்பவர் சந்தேகத்தின் பேரில் ஊர்காவற்துறையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து நேற்று வட மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் நேற்று கொழும்பில் வைத்து குற்றப் புலனாய்வு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
மேலும் பிரதேச சபைத் தலைவரின் மனைவியான அனிதா றெக்சியனும் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவர்கள் மூவரையும் இன்று ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே நீதவான் மேற்படி விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.