பக்கங்கள்

பக்கங்கள்

1 பிப்., 2014

லண்டனில் இடம்பெறும் தமிழர்களின் நில அபகரிப்பிற்கு எதிரான மாநாடு
தமிழர் தாயகத்தில் தமிழர்களின் நில அபகரிப்பிற்கு எதிரான மாநாடு பிரித்தானியப் பாராளுமன்றின் இலக்கம் 14 ஆம் அறையில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
பிரித்தானியர் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் ஆரம்பமான இந்நிகழ்வில், தாயகத்திலிருந்து தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர்களும் இணைந்து கொண்டு தமது பங்களிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
முதல் கட்டமாக தாயகத்தில் இன்னுயிர் நீத்த எமது உறவுகளுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களான மதிப்பிற்குரிய சிவோன் மற்றும் லீ-ஸ்கொட் ஆகியோரும் உரை நிகழ்த்தி ஆரம்பித்து வைத்துள்ளனர்.