.

பக்கங்கள்

▼

பக்கங்கள்

▼

28 ஜன., 2014


Kalaignar Karunanidhi · 96.951 gefällt das
vor 7 Stunden · 
  • செய்தியாளர் :- மதுரையில் மு.க. அழகிரி அளித்துள்ள பேட்டி பற்றி?

    பதில் :- பொதுவாக திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்த வரையில் கழகத் தலைவர் அல்லது பொதுச் செயலாளர் அல்லது பொருளாளர் ஆகியோர் மூலமாகத் தான் செயற்குழு, பொதுக்குழுவில் எடுக்கப்படுகின்ற
    முடிவுகளைப் பற்றி அறிவிப்பது வழக்கம். ஆனால் அதற்கு மாறாக செயற்குழு, பொதுக்குழு முடிவுகளை அலட்சியம் செய்தோ அல்லது விமர்சித்தோ அல்லது
    கட்டுப்படாமலோ கழகத்திலே உள்ள யாரும்; முக்கியமாக பொறுப்பிலே உள்ளவர்கள் நடந்து கொள்வதில்லை. ஆனால் கடந்த சில மாதங்களாக
    மு.க.அழகிரி; தான் கழக உறுப்பினர் என்பதை மறந்து விட்டு, இன்னும் சொல்லப் போனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தென் மண்டல அமைப்புச் செயலாளர் என்ற பொறுப்பிலே இருப்பவர் என்பதையும் மறந்து விட்டு - பத்திரிகைகளுக்கும், தொலைக்காட்சிகளுக்கும் பேட்டி கொடுத்து, அது தவறான அரசியல் விளைவுகளுக்கு வழி காட்டுவதாக அமைந்து வருவதை நீங்களே உணர்வீர்கள். அண்மையில் அவர் அளித்த தொலைக்காட்சி பேட்டியைக் கண்டும், கேட்டும் இருக்கிறீர்கள். அவருக்கு தி.மு. கழகத்தின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் மீது ஏதோ ஒரு இனம் தெரியாத வெறுப்பு நீண்ட காலமாக இருந்து வருகிறது.

    அதற்கெல்லாம் உச்ச கட்டமாக கடந்த 24ஆம் தேதியன்று விடியற் காலை என்னுடைய வீட்டிற்குள்ளே அவர் நுழைந்து, படுக்கையில் இருந்த என்னிடம் ஸ்டாலினைப் பற்றி புகார் கூறி, விரும்பத்தகாத, வெறுக்கத் தக்க வார்த்தைகளை யெல்லாம் மளமளவென்று பேசி என்னைக் கொதிப்படைய
    வைத்தார். நினைத்தாலே என் நெஞ்சு வெடிக்கக்கூடியதும், இதயம் நின்று விடக் கூடியதுமான ஒரு சொல்லையும் அவர் சொன்னார். அதாவது ஸ்டாலின் இன்னும் மூன்று நான்கு மாதங்களுக்குள் செத்து விடுவார் என்று உரத்த குரலில் என்னிடத்திலே சொன்னார். எந்த தகப்பனாராவது இது போன்ற
    வார்த்தைகளைத் தாங்கிக் கொள்ள முடியும் என்று யாரும் கருத முடியாது. நான் கட்சித் தலைவனாக இருக்கிறவன் என்ற முறையில் அதைத் தாங்கிக்
    கொண்டேன்.

    நியாயம் கேட்டதாக இப்போது சொல்கிறார். விடியற்காலை ஆறு அல்லது ஏழு மணிக்கா கட்சித் தலைவரிடம் நியாயம் கேட்க வருவது என்பதை நீங்கள்
    தான் நினைத்துப் பார்க்க வேண்டும். அவர் வெளியிலே வந்து சொல்கிற குற்றச்சாட்டு கட்சியிலே சில பேர் மீது, குறிப்பாக அவருக்கு வேண்டிய நண்பர்கள் மீது நடவடிக்கை எடுத்தது தவறு என்ற குற்றச்சாட்டாகும். கட்சியிலே உள்ள மதுரை மாவட்டக் கழகச் செயலாளர் மூர்த்தி அவர்கள் மீது பி.சி.ஆர். சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று போலீசாருக்கு எழுதிக் கொடுத்தவரை, கட்சித் தலைவர் என்ற முறையில் நான் விசாரிப்பதும், கண்டிப்பதும் எப்படி குற்றமாகும் என்பதையும் உங்கள் யோசனைக்கே விட்டு விடுகிறேன். அவர் மீது கட்சியின் சட்டதிட்டபடி பொதுச் செயலாளர் அவர்கள் கண்டனமும், ஒழுங்கு நடவடிக்கையும் எடுத்துள்ளார் என்பது அனைவரும்
    அறிந்த ஒன்றேயாகும். அது கழகத்தின் சட்டதிட்டப்படி செய்யப்பட்ட ஒன்றாகும். அதற்கு நேரிலோ அல்லது எழுத்துப் பூர்வமாகவோ விளக்கமளித்து
    பிரச்சினையை அணுக வேண்டுமே தவிர தனக்கு வேண்டிய பழைய நண்பர் கூட்டத்தை வைத்துக் கொண்டு சுவரொட்டிகளை ஒட்டுவதும், பத்திரிகை
    களுக்குப் பேட்டி கொடுப்பதும் எப்படி முறையாகும்?
    என் மகன்கள் ஸ்டாலின் ஆனாலும், அழகிரி ஆனாலும் மகன்கள் என்ற உறவு நிலையிலே அல்ல; கட்சி உறுப்பினர்கள் என்ற முறையிலே கூட அவர்களில் ஒருவர் நான்கு மாதங்களில் செத்து விடுவார் என்று கட்சித் தலைவனாகிய எனக்கு முன்னாலேயே உரத்த குரலில், ஆரூடம் கணிப்பது யாராலும் பொறுத்துக் கொள்ள முடியாத ஒன்றாகும்.

    இந்த இயக்கம் அண்ணா காலத்திலிருந்து இதுவரையில் எத்தனையோ இது போன்ற சோதனைகளை யெல்லாம் சந்தித்து விட்டு, இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இயக்கமாகும். தமிழ் மக்கள் வளத்தோடும், வலிமையோடும் வாழ வேண்டுமென்பதற்காக என்னுடைய 14வது வயது முதல் இந்த 91வது
    வயது வரையில் பல தியாகங்களைச் செய்து அடக்கு முறைகளை ஏற்று, பெரியாரும், அண்ணாவும் உருவாக்கித் தந்த இந்த இயக்கத்தை வளர்த்துக்
    கொண்டிருக்கிறவன் என்ற முறையில் இந்த உண்மை நிலவரத்தை தமிழ் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டுமென்பதற்காகவே பத்திரிகையாளர்களாகிய
    உங்கள் மூலமாக இந்தச் செய்திகளை யெல்லாம் தெரிவித்துக் கொள்கிறேன்.
    144Gefällt mir ·  · Teilen
    • Top-Kommentare
      414 Personen gefällt das.
    • Switzerland Siva-sandrabalan
    • Karthik Tpr அய்யா நாங்கள் இருக்கின்றோம் கோடிகனக்கான உங்கள் உயிரினும் மேலான உடன்பிறப்புகள் இருக்கும் வரை நம் இயக்கத்தை யாராலும் வீழ்த்த முடியாது அய்யா. கண்ணீருடன் கூறுகிறேன் நீங்களும் தளபதி அவர்களும் இருக்கும் போது எவர் போனால் என்ன . எம்ஜிஆரால் கூட வீழ்த்த முடியாத நம் இயக்கத்தை இவரா வீழ்த்தி விடுவார் . 

      நாற்பதிலும் வெல்ல முடியும் வென்று காட்டுகிறோம் . அய்யா
      Gefällt mir · Antworten · 40 · vor 7 Stunden · Bearbeitet
      • 10 Antworten · vor 3 Stunden
    • Thamimun Anzari Dear Facebook friends.. Don't use bad, irresponsible and irrespective words against DMK Leader. If u can't tolerate his political movements u should unlike this page. Because he is not only political leader but also the family leader of his family and also he is an one and only senior politician in India. Can we smile anyone scolding our father? Feelings and selfrespect are same to all.
      Gefällt mir · Antworten · 15 · vor 3 Stunden
    • Thami Zhar முக .அழகிரி ஆருடம் சொன்னால் உங்கள் பகுத்தறிவு எங்கே போய்விட்டது, பெரியாரின் வழிவந்த கலைஞர் ருக்கு ஆருடத்தின் மேல் நம்பிக்கை இருக்கிறதா என்ன ? அப்படி ஒரு தந்தையாக நீங்கள் கண்டித்து இருந்தால் உங்கள் மகனை மட்டுமே கண்டித்திருக்க வேண்டும்.அவர்மேல் கட்சி நடவடிக்கை எடுத்திருக்க கூடாதல்லவா? மதுரை மாவட்ட அமைப்புசெயலார் பதவியை காலி பண்ணியதை சொன்னேன், ஏனெனில் கட்சி பெரியாரின் வழிவந்த பகுத்தறிவு கட்சி ஆயிற்றே ..
      Gefällt mir · Antworten · 24 · vor 6 Stunden · Bearbeitet
      • 3 Antworten · vor 3 Stunden
    • Balaji Yeskay கதை, திரைக்கதை,வசனம் -மு.க
      Gefällt mir · Antworten · 19 · vor 7 Stunden
    • Jain Koo Pee எம் தலைவர் கண்களில் நீர் கசிந்ததை பார்த்தது ....
      அண்ணாவின் மறைவின் போது......
      ...Mehr anzeigen
      Gefällt mir · Antworten · 6 · vor 5 Stunden
    • Navaneetha Krishnan தலைவரே உங்கள் பின்னால் என்றும் நாங்கள்....தளபதி தோள் கொடுக்க நாங்கள் உள்ளோம்
      Gefällt mir · Antworten · 5 · vor 7 Stunden
    • Mithun Vijay ஸ்டாலீன் செத்துவிடுவான் என்று சொன்னதையே உன்னால் தாங்க முடியலையேடா கிழட்டுப் பயலே. ஈழத்தில் எங்கள் சொந்தங்கள் இறந்தபொழுது நீ எதுவும் சொல்லவில்லையேடா,
      துரோகி நாயே.
      Gefällt mir · Antworten · 20 · vor 5 Stunden
      • 12 Antworten · vor 40 Minuten
    • பிரபாகரன் பிரபாகரன் இத்தோடு தி மு க முடிந்தது
      Gefällt mir · Antworten · 4 · vor 6 Stunden
      • 2 Antworten · vor 2 Stunden
    • Thaha Maraikayar Nagore கட்சிக்கு களங்கம் ஏற்படுத்துவதே இவரும் இவரது அடிபொடிகளும் தான் நீங்கள் ஆரம்பத்திலேயே நடவடிக்கை யெடுக்காதர்தர்க்கு மகன் என்ற பாசம் தான் அருமையான தா .கிரிஷ்னனை இழந்தோம் மதுரை தினகரன் அலுவலகத்துக்கு தீ வைத்து 3 பேர் சாவுக்கும் இவரே காரணம் 90 வயது முதிர்ந்...Mehr anzeigen
      Gefällt mir · Antworten · 4 · vor 6 Stunden
    • Dhinakaran Palaniswamy Thami Zhar ஆருடம் என்ற வார்த்தையை நீங்கள் எடுத்துக்கொன்ட அர்த்தத்தில் தலைவர் கூறவில்லை . அது அழகிரியின் ஆசை அல்லது எண்ணம் என்று அர்த்தம் கொள்ளவேண்டும். மற்றபடி உங்கள் கேள்விகளுக்கு தலைவரின் அறிக்கையிலேயே பதில் உள்ளது.கட்சி உறுப்பினர் என்ற அடிப்படையிலேயே அழகிரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
      Gefällt mir · Antworten · 4 · vor 6 Stunden
    • Manoj Kumar மொத்த திமுகவுக்கே போன் ஒயர் பிஞ்சி பல வருசமாகுது, பிஞ்ச போன் ஒயர்ல யார்கூட இவ்ளோ நாள் பேசறாங்கன்னு தெரிலயே.
      Gefällt mir · Antworten · 4 · vor 5 Stunden
    • Syed Aleem அய்யா நாங்கள் இருக்கின்றோம் !!!!!!!!! நம் இயக்கத்தை யாராலும் வீழ்த்த முடியாது அய்யா!
      Gefällt mir · Antworten · 4 · vor 7 Stunden
      • Rajini Raja over nambikai udambukku agathu
        Gefällt mir · vor 5 Stunden
      • Switzerland Siva-sandrabalan
    • Pk Ravi அட நாசமா போனவங்களே நீங்களாம் இருக்கும் வரை இந்ததமிழ்நாட்டையும் மக்களையும் யாராலும் காப்பாற்ற முடியாது
      Gefällt mir · Antworten · 8 · vor 6 Stunden
    • Saravanan Kandasamy Gr It's your family problem like dayanithi problem
      Gefällt mir · Antworten · 3 · vor 7 Stunden
    • கிருஷ்ணகிரி இரா. சாய்குமார் நீங்கதான் எங்ககளுக்கு தேவை
      Gefällt mir · Antworten · 3 · vor 7 Stunden
    • பாரதி தமிழன் திரு ஸ்டாலினே திமுகாவின் வருங்கால தலைவராக இருப்பது பொறுத்தம்,திமுக தலைவர் கலைஞர் அவர்களும்,அதிரு அன்பழகன் அவர்களும் அறிவித்த பிறகு முரண்பட்ட கருத்தை வெளியிடுவது கட்சிக்கு பாதகமாகவே அமையும்,
      Gefällt mir · Antworten · 1 · vor 5 Stunden
    • தமிழ் குரல் எத்தனையோ துன்பங்களைத் தாங்கிக் கொண்டு கழகத்தைக் காத்த தலைவர் கலைஞர் அவர்களாலேயே தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்குப் பேசியிருக்கிறார் எனும்போது கழகத் தொண்டர்கள் அதை எவ்வாறு தாங்கிக் கொள்வார்கள்? சில சுயநலவாதிகளைத் தவிர மற்ற அனைவரும் கட்டுக்கோப்புடன் தலைவர், தளபதியார் வழிகாட்டுதலில் களம் காண்போம்...கழகம் காப்போம்!
      Gefällt mir · Antworten · 1 · vor 6 Stunden
      • வேதாளமும் வண்டவாளமும் நீங்க வைகோவுக்கு காட்டிய வழியை எங்களுக்கும் காட்டுங்க மேதகு தமிழ் குரல் ஐயா
        Gefällt mir · 1 · vor 3 Stunden
      • Switzerland Siva-sandrabalan
    • Dhinakaran Palaniswamy டேய் mithun vijay தே......பயலே மரியாதையாகப் பேசு முகநூலில் ஒளிந்து கொண்டு பேசுவதை தைரியமிருந்தால் பொதுவௌியில் வந்து பேசு
      Gefällt mir · Antworten · 1 · vor 2 Stunden
    • Mugavai Chell இனி மேலாவது அழகிரி ,கனிமொழி போன்ற கட்சியின் அழிவு சக்திகளை களையெடுத்து கட்சியை காப்பாற்றுவது தலைவரின் கடமை..
      Gefällt mir · Antworten · 2 · vor 3 Stunden
    • Sukumar Shanmugam அய்யா 40 நாடாளுமன்ற தொகுதியை ஸ்டாலின் தலைமையில் நடத்த வேண்டும் நிச்சயம் வெற்றி பெறும்
      Gefällt mir · Antworten · 1 · vor 4 Stunden
    • Senthamarai Kannan அழகிரியை கட்சியை விட்டு நிரந்தரமாக நீக்கவேண்டும்.
      Gefällt mir · Antworten · 2 · vor 6 Stunden
    • Jaffar Shadique உங்களின் உடன்பிறப்புகள் இருக்கும் வரை நம் இயக்கத்தை யாராலும் வீழ்த்த முடியாது..
      Gefällt mir · Antworten · 1 · vor 7 Stunden
    • Mani Muthuperumal En thalapthy missa ve kandavar.. Alagri UNal ontrum pana mudyathu
      Gefällt mir · Antworten · 1 · vor 7 Stunden
    • Sripathy Prakasam Lesly Andrew
      Gefällt mir · Antworten · 1 · vor 7 Stunden
    • Smart Varathan arasiyal nadagam(ulaga maga nadikan kal da neenga)
      Gefällt mir · Antworten · 2 · vor 7 Stunden
    • S Killai Ravindran உன் கண்ணில் நீர் வழிந்தால் - எங்கள்
      உதிரம் கொதிக்குதய்யா
      -------------------------------------------------------------------
      ...Mehr anzeigen
      Gefällt mir · Antworten · 4 · vor 6 Stunden
    • Prabhu Maruthachalam உடன் பிறப்புகளே அழகிரிக்கு எதிரா ரொம்ப துள்ளாதீங்க, கண்கள் பனிக்கும்போது உங்களுக்கு ஆப்பு வச்சுருவாங்க டாடியும் சன்னும்
      Gefällt mir · Antworten · vor etwa einer Stunde
    • Thiruppathi Kannan O Positive Nagore ku oru soda kudunga pa
      Gefällt mir · Antworten · vor 6 Stunden
    • Dayanithi Hari Wow it is nice to read .....
      Gefällt mir · Antworten · vor etwa einer Stunde
    • Baul Manian shame ... such man was former union minister.
      Gefällt mir · Antworten · vor 3 Stunden
    • Sukumar Shanmugam ஒரு மாற்றம் செய்ய வேண்டும் பிறகு கட்சியின் வளர்ச்சி தெரியும்
      Gefällt mir · Antworten · vor 4 Stunden
    • Chandra Mohan kalaingaraiyo illa thalapathi yo patri thavaraga pesa evanukkum arugathai kidaiyathu itharku mela evanavathu pesinal atharkana vilaivugalai santhika neridum.
      Gefällt mir · Antworten · 1 · vor 4 Stunden
    • R Tamil O Ramar மனுநீதிச் சோழன் எதற்கும் கலங்ககூடாது !! இரா. தமிழ்ச்செல்வன்
      Gefällt mir · Antworten · vor 5 Stunden
    • Ramamoorthy Venkatesan இந்த அளவிற்கு தாங்கள் வேதனை அடைந்திருக்கிறீர்கள் என்றால், எவ்வளவு காலங்கள் தாங்கள் பொறுமை காத்து, இன்று இந்த முடிவிற்கு வந்துள்ளீர்கள் என்பதை சம்பந்தப்பட்ட அனைவரும் உணர வேண்டும்.எரிமலை ( தவறு உங்கள் மேல் அல்ல, இமயமலையை எரிமலையாக ஆக்கியவர்கள் மீதுதான் ) ஒருநாள் வெடித்தே ஆகவேண்டும் என்பதுதான் விதி.. !
      Gefällt mir · Antworten · 1 · vor 5 Stunden · Bearbeitet
    • Petchi Muthu Ithellam nammbara mathiriyange irukku??m
      Gefällt mir · Antworten · 1 · vor 6 Stunden
    • Sivakumar Arumugam தமிழ் மக்கள் வழத்தோடும், வலிமையோடும் வாழ- நல்ல நகைச்சுவை (குறிப்பு நான் ஆ.இ.அதிமுக அல்ல )
      Gefällt mir · Antworten · 1 · vor 6 Stunden
    • Kvp Kumar Narpatthum Manettheaa ayya
      Gefällt mir · Antworten · 1 · vor 6 Stunden
    • Kishore Arumugam Deivam ninru kollum ... Ninaivu irukiradha ramar paalam..what we sow that we reep..
      Gefällt mir · Antworten · vor 6 Stunden
    • Arun Danny thalaiva u r gr8(nnnnalla kudumpam daaaaaaa)
      Gefällt mir · Antworten · 1 · vor 6 Stunden
    • Ramaswamy Srr We support you
      Gefällt mir · Antworten · vor 7 Stunden
    • Rajesh Santhanam Enkal anubu thlai vaa kavalai vaaandam unku neekal kaai asaithal poothum nakal erukerom un paathaiyeel.
      Gefällt mir · Antworten · vor 7 Stunden
    • Vasanth Rajasekaran உடன்பிறப்புகள் இருக்கும் வரை நம் இயக்கத்தை யாராலும் வீழ்த்த முடியாது
      Gefällt mir · Antworten · 1 · vor 7 Stunden
    • Sanjay Chennai அழகிரி சண்ட போட்டப்ப வெளில வந்து அப்பவே சொல்லிருக்கலாம் இல்ல . ரெண்டு நாள் அப்பறம் எதுக்கு இப்ப இப்படி சொல்றீங்க . அப்பவே சொல்லிருந்த நாங்க நம்பிருபோம்
      Gefällt mir · Antworten · 1 · vor 5 Stunden
    • Senthil Roja Anna uruvakiya d.m.k ila ithu
      Gefällt mir · Antworten · vor 20 Minuten
    • Devan Arasu Good
      Gefällt mir · Antworten · vor etwa einer Stunde
    • Raj Kumar dear friends alagiri is a gud leader too. his innocent made to give press meet according to me many dmk members has the same feeling against the district leaders ward seceratary etc . so there must some curtosy towards members of the party.and they must be respected
      Gefällt mir · Antworten · vor etwa einer Stunde
    • Sukumar Venkatraman It is sad & quite unfortunate. You allowed all your family members to occupy center stage, removed top leaders and hardcore dmk workers from the party to satisfy your inner circle, you are paying the price now
      Gefällt mir · Antworten · vor 2 Stunden
    • Giftson Raja Thalavera tamil iname ungal pinnalum thalapathiyar pinalum than
      Gefällt mir · Antworten · vor 2 Stunden
    • Soumya Narayanan எங்கள் மானமிகு முத்தமிழ் அறிஞர் தமிழின காவலர் தாங்கள் இன்னுமோர் நூற்றாண்டு வாழ்ந்து எங்கள் சந்ததியினர் வாழும் காலத்திலும் தாங்கள் மீண்டும் முதல் அமைச்சர் பொறுப்பேட்று அனைவரிடத்திலும் ஒற்றுமை நிலைத்திட தாங்கள் அயராது உழைக்க எல்லாம் வல்ல அந்த இறைவன் தாங...Mehr anzeigen
      Gefällt mir · Antworten · vor 2 Stunden
    • Abraham Dinakar G ayya, party people always with us. don"t worry .
      Gefällt mir · Antworten · vor 3 Stunden
    • 50 von 77
      Weitere Kommentare anzeigen

at 21:58
பகிர்
‹
›
முகப்பு
வலையில் காட்டு
Blogger இயக்குவது.