பக்கங்கள்

பக்கங்கள்

17 பிப்., 2014


வடக்கில் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடிய வகையில் ஆறு ஆயுதக் குழுக்கள் இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புலனாய்வுப் பிரிவினர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர்.உடற்பயிற்சி நிலையம் என்ற பெயரில் பாரிய வீடுகளை வாடகைக்கு அமர்த்தி இந்தக் குழுக்கள் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டு வருகின்றன.
பிரச்சினைகளை தீர்த்துக் கொடுக்க பணம் பெற்றுக்கொள்ளப்படுகிறது. ஆயுதங்களைப் பயன்படுத்தி குற்றச் செயல்களில் ஈடுபடும் இந்த குழுக்களுக்கு எதிராக அச்சம் காரணமாக மக்கள் முறைப்பாடு செய்வதில்லை.
குறித்த குழுக்களினால் மேற்கொள்ளப்படும் குற்றச் செயல்கள் தொடர்பில் இராணுவத்தின் மீதே குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
அரச புலனாய்வுப் பிரிவும், இராணுவப் புலனாய்வுப் பிரிவும் இது தொடர்பிலான விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் இந்தக் குழுக்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.