பக்கங்கள்

பக்கங்கள்

19 பிப்., 2014



தனது மகன் பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதற்கு, முதல்வர் ஜெயலலிதாவிடம் அற்புதம்மாள் நேரில் நன்றி தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பு தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்தி:
'முதல்வர் ஜெயலலிதாவை இன்று தலைமைச் செயலகத்தில், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் சந்தித்து, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க நடவடிக்கை
எடுத்தமைக்காக, தனது நன்றிகளை கண்ணீர் மல்க தெரிவித்துக்கொண்டார்.

சாந்தனை பார்க்க ஆசையா இருக்கு!- சகோதரி, சகோதரன், தாயார்
"ஒரு அம்மாவின் உணர்வை புரிந்துகொண்டீர்கள் அம்மா. எனது மகன் என்னிடம் வந்து சேருவானா என்று பயந்திருந்தேன். அந்த பயம் இன்று போய்விட்டது அம்மா" என்று நெஞ்சம் நெகிழ நன்றி கூறினார்' என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.