பக்கங்கள்

பக்கங்கள்

15 ஏப்., 2014

குளியாப்பிட்டிய பிரதேசத்தில் ஆயிரம் ரூபா போலி நாணயத்தாளுடன் 36 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் வைப்பில் இடுவதற்காக சென்ற போது பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
இவரிடமிருந்து 5 போலி நாணயத்தாள்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
 
சந்தேக நபரை இன்று குளியாப்பிட்டிய நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.