பக்கங்கள்

பக்கங்கள்

8 மே, 2014

மாவட்டங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி மன்னாரில்
வடமாகாண விளையாட்டுத் திணைக்களம் நடத்தும் மாவட்டங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி எதிர்வரும் 10 ஆம், 11 ஆம் திகதிகளில் மன்னார் மாவட்டத்தில் இடம்பெறவுள்ளது.

 
இதில் ஆண், பெண் இருபாலாருக்குமான உதைபந்தாட்டம், கிரிக்கெட், கூடைப்பந்தாட்டம், பூப்பந்தாட்டம், மேசைப்பந்தாட்டப் போட்டிகள் என்பன இடம்பெறவுள்ளன.