பக்கங்கள்

பக்கங்கள்

15 மே, 2014

சுற்றுலா வந்தவர் வலித்தூண்டலில் சடலமாக மீட்பு 
யாழ். கீரிமலை வலித்தூண்டல் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.


வலித்தூண்டல் பகுதியில் இன்று காலை கரையொதுங்கிய ஆணின் சடலம் அடையாளம் காணப்பட்டது.  நுவரெலியா, ராகலையைச் சேர்ந்த ராஜன் கிருஷ்ணசாமி (வயது 60) என்பவராவார்

குறித்த நபர் யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்தபோது கடற்கரையிலிருந்து அருந்திய  பாணத்தில் விஷம் கலந்திருந்தமை விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

இதன் பின்னர் இவரது சடலம் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு கரையொதுங்கியது என்றும் இளவாலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.