பக்கங்கள்

பக்கங்கள்

1 ஆக., 2014


கொமன்வெல்த் போட்டியில் ஜனாதிபதி பங்கேற்காததன் காரணம் பாதுகாப்பு பிரச்சினையே!- கெஹலிய
பாதுகாப்பு தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினையே, ஜனாதிபதி ஸ்கொட்லாந்து க்ளாஸ்கோ நகரில் இடம்பெற்று வரும் பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்காமைக்கான காரணம் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
பொதுநலவாய அரச தலைவர் என்ற வகையில், அந்த விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கு ஜனாதிபதி எதிர்பார்த்திருந்தாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், ஜனாதிபதியின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக அந்த தீர்மானம் மாற்றமடைந்ததாகவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.