பக்கங்கள்

பக்கங்கள்

26 டிச., 2014

சுனாமியின் போது ஏற்பட்ட கட்சிகளின் ஒற்றுமை பொதுவேட்பாளர் விடயத்திலும் ஏற்பட்டுள்ளது: சந்திரிக்கா

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறுவார் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சுனாமியின் 10ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று கொழும்பு காக்கைத்தீவில் இடம்பெற்ற நிகழ்வில் பங்கேற்றபோதே சந்திரிக்கா இந்த நம்பிக்கையை வெளியிட்டார்.
பொதுவேட்பாளரின் வெற்றிக்கு பின்னால் பல கட்சிகள் செயற்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
2004 ஆம் ஆண்டு சுனாமி ஏற்பட்டபோது இலங்கையின் அனைத்துக்கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட்டன.
இதைப்போன்றே இன்று பொதுவேட்பாளரின் பின்னால் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன என்று சந்திரிக்கா கூறினார்.
சுனாமியின் போது “ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை” நிதியம் தொடர்பில் சர்ச்சைக்குரிய வழக்கில் நிதியத்துக்கு சார்பாக தீர்ப்பு வழங்கியமை தமது பிழையென்று முன்னாள் பிரதமநீதியரசர் சரன் என் சில்வா ஏற்றுக்கொண்டமையையும் சந்திரிக்கா சுட்டிக்காட்டினார்.