பக்கங்கள்

பக்கங்கள்

10 டிச., 2014

திருமலை: திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ள ராஜபக்சேவை படம்பிடிக்க முயன்ற தமிழக செய்தியாளர்களை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பதிக்கு சாமிதரிசனம் செய்ய இலங்கை அதிபர் ராஜபக்சே வந்துள்ளார். இந்நிலையில், திருமலையில் ராஜபக்சேவை படம்பிடிக்க முயன்ற
தமிழக செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் 10 தமிழக செய்தியாளர்களை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர். தமிழக செய்தியாளர்களின் கேமரா உள்ளிட்ட பொருட்களையும் பறித்து சென்றுள்ளனர் திருமலை போலீசார்.
மேலும், சாமி தரிசனம் முடிந்து வந்த ராஜபக்சேவுக்கு ம.தி.மு.க.வினர் கறுப்புக்கொடி காட்டினர். கறுப்புக் கொடி காட்டிய ம.தி.மு.க.வினர் மீதும் ஆந்திர போலீசார் தாக்குதல் நடத்தினர். அப்போது, சம்பவ இடத்தில் இருந்த தமிழக செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மீதும் ஆந்திர போலீசார் தாக்குதல் நடத்தினர். செய்தியாளர்கள் வைத்திருந்த கேமரா உள்ளிட்ட உபகரணங்களையும் போலீசார் உடைத்தனர்.