பக்கங்கள்

பக்கங்கள்

5 டிச., 2014

புங்குடுதீவு சிவலைபிட்டி ச ச நிலையை முன்பள்ளி மாணவர்களின் பிரியாவிடை 
இன்று சிவலைப்பிட்டி ச ச நிலையமுன்பள்ளியில் இருந்து அடுத்த வருடம் முதலாம் ஆண்டு செல்லவிருக்கும் மாணவர்களுக்கான பிரிவுபசார விழாவும்
, கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் மிகச்சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இவ்விழாவைச் சிறப்பிக்க வலம்புரி பத்திரிகை ஆசிரியரும் அகில இலங்கை தபாலதிபர் சங்க தலைவர் திரு. சதீபன், J27 பிரிவு கிராமசேவகர் திரு. வ.கோகிலதாஸ், J33 பிரிவு கிராமசேவகர் திரு.பிரியலக்சன் மற்றும் சேர் துரைசுவாமி வித்தியாலய அதிபர் திருமதி ம.கணேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்துள்ளார்கள். மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை நிலைய இளையோர்கள் வழங்கினார்கள். ஆசிரியர்களுக்கான கெளரவ பரிசை திரு.சின்னையா குடும்பம் அவர்கள் வழங்கி இருந்தார்.