பக்கங்கள்

பக்கங்கள்

3 ஜன., 2015

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் புலனாய்வுப் பிரிவு! கோத்தாவின் வெறியாட்டம்


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்திற்குள் புலனாய்வுப் பிரிவினரைக் கொண்டு சோதனையிட முயன்ற கோத்தபாய ராஜபக்ஷவின் முயற்சி தோல்வியில்
முடிவடைந்துள்ளது.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் பணிப்புரையின்பேரில் பொலிஸ் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் டீ.ஆர்.எல். ரணவீர இதற்கான நீதிமன்ற உத்தரவைப் பெற்றிருந்தார்.
கோட்டை நீதவான் திலிண கமகே விடுமுறையில் இருந்த நிலையில், புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் நேரடியாக அவர் முன் ஆஜராகி ஸ்ரீகொத்தா உள்ளிட்ட ஒன்பது இடங்களை சோதனை செய்வதற்கான உத்தரவைப் பெற்றுள்ளார்.
சோதனை நடவடிக்கைக்காக புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராகி உத்தரவு பெற்றுக் கொண்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்று கூறப்படுகின்றது.
இதனையடுத்து ஸ்ரீகொத்தாவை பெரும் பொலிஸ் படை முற்றுகையிட்ட போதிலும், அங்கு குவிந்திருந்த ஊடகவியலாளர்களை மீறி உள்நுழைய முடியாமல் திணற நேரிட்டுள்ளது. அத்துடன் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் திணறிய பொலிசார் தமது நோக்கத்தை கைவிட்டு திரும்பிச் செல்ல நேரிட்டுள்ளது.
ராஜபக்ஷ குடும்பத்தினரின் ஊழல்களை அம்பலப்படுத்தும் வகையில் பிரசுரிக்கப்பட்டுள்ள பவுல்கச (குடும்பமரம்) என்ற புத்தகம் ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட தரப்பினரை கடும் ஆத்திரக்குள்ளாக்கியுள்ளது.
இதில் ராஜபக்ஷ குடும்பத்தினரின் ஊழல்கள் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே குறித்த புத்தகங்களை கைப்பற்றி அழிப்பதுடன், அதனை வடிவமைத்த நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவையும் கைது செய்யும் நோக்கிலேயே ஸ்ரீகொத்தா நோக்கி புலனாய்வுப் பிரிவினர் ஏவி விடப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.