பக்கங்கள்

பக்கங்கள்

20 ஜன., 2015

ஜெர்மனி செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி



ஜெர்மனியில் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள ஹன்னோவர் பொருட்காட்சியை இந்தியாவும் சேர்ந்து நடத்துகின்றது. இந்த பொருட்காட்சியின்போது பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி செல்கிறார்.

தலைநகர் டெல்லியில் ஜெர்மனி நாட்டு நிதி மந்திரி வோல்பாங் ஸ்குவாபுல்-ஐ சந்தித்து பேசிய பிரதமர் மோடி அவரிடம் தனது ஜெர்மனி பயணத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜி-20 மாநாட்டின்போது ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கலை சந்தித்துப் பேசியதை அவரிடம் நினைவுகூர்ந்த மோடி, விரைவில் அவரை மீண்டும் சந்தித்துப் பேச ஆவலுடன் உள்ளதாக குறிப்பிட்டார்.