பக்கங்கள்

பக்கங்கள்

27 ஜன., 2015

கோதாவை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவுக்கு எதிராக ரத்துபஸ்வெல மக்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  கடந்த அரசாங்கத்தில் உயிர்களைப் பலிகொடுத்தும் நியாயமான தீர்வைப் பெற முடியாமற் போனதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அம்மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சியனப் பிரதேச குடிநீர் பாதுகாப்பு மக்கள் எழுச்சி அமைப்பின் ஏற்பாட்டாளர் பிரமித ஹெட்டியாராச்சி இது தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையில்;
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, அந்த நேரத்தில் கடமையில்
 இருந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர், அப்பொழுது கடமையில் இருந்த இராணுவத் தளபதி அல்லது பதில் இராணுவத் தளபதி ஆகியோரை உடன் அழைத்து விசாரணை மேற்கொள்ளப்படல் வேண்டும்.

கடந்த அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைகள் குறித்து எமது மக்கள் திருப்திப்படப் போவதில்லை.
இது தொடர்பிலான விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் நாம் முறைப்பாடொன்றைக் கையளித்துள்ளோம்.
அடுத்த மூன்று மாத காலத்துக்குள் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படவேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்தியே மக்கள் வீதியில் இறங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

குடிநீர் கேட்டு வீதியில் இறங்கிப் போராடிய மக்கள்மீது மகிந்த அரசாங்கம் துப்பாக்கியால் பதில் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.