பக்கங்கள்

பக்கங்கள்

18 பிப்., 2015

மீண்டும் அரசியலுக்கு வரும் எந்த எண்ணமும் தனக்கில்லை -மகிந்த ராஜபக்ச

நுகேகொடை கூட்டத்திற்கு செல்லப் போவதில்லை: மஹிந்த
மீண்டும் அரசியலுக்கு வரும் எந்த எண்ணமும் தனக்கில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி நுகேகொடையில் நாளை பொதுக் கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.
அந்த கூட்டத்தில் தான் கலந்து கொள்ள போவதில்லை என மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். தனக்கு நெருக்கமான சிலரிடம் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
செயற்பாட்டு ரீதியான அரசியலுக்கு மீண்டும் வரும் எண்ணம் தனக்கில்லை எனவும் தனது புதல்வரான நாமல் ராஜபக்சவின் எதிர்கால அரசியல் முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளில் ஈடுபட போவதாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.