பக்கங்கள்

பக்கங்கள்

11 மார்., 2015

இனப்பதற்றத்தை உடைக்க அமெரிக்கா உதவும்!- அமெரிக்க இராஜாங்க திணைக்களம்


இலங்கையின் புதிய அரசாங்கம், ஜனநாயகத்தை காக்கவும் இனப்பதற்றத்தை உடைக்கவும் அமெரிக்கா உதவி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பி;ல் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பிராந்திய விவகார பணிப்பாளர் நெய்ல் ரோமாஸ் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது வாய்ப்பான அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த முன்னெடுப்புக்கள், ஏதேச்சதிகார அரசாங்கத்தை வீழ்த்திய புதிய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் இனப்பதற்றத்தை தவிர்க்க புதிய அரசாங்கத்துக்கு அமெரிக்கா உதவும் என்று நெய்ல் ரோமாஸ் குறிப்பிட்டுள்ளார்