பக்கங்கள்

பக்கங்கள்

13 மார்., 2015

கட்டுநாயக்காவில் கைதான பிரான்ஸ் பெண் பிணையில் விடுதலை

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட பிரான்சில் வசித்து வரும் ஜெயகணேஸ் பகீரதி கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு இன்று மதியம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இவர் சார்பில் ஆஜரான சிரேஸ்ர சட்டத்தரணி கே.வி. தவராசாவின் வாதத்தினை அவதானித்த கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி,  ஜெயகணேஸ் பகீரதியை மூன்று நிபந்தனையுடன் கூடிய பிணையில் விடுதலை செய்துள்ளார்.
இவரை இலங்கை அரசு கடற் புலிகளின் முக்கியஸ்தர் என குற்றஞ் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவரது பெண் குழந்தை சாம்ராஜூ இவ்வார ஆரம்பத்தில் பகீரதியின் உறவினர்களிடம் கையளிக்கப் பட்டமை குறிப்பிடத்தக்கது.