பக்கங்கள்

பக்கங்கள்

4 மார்., 2015

நான் நாட்டு மக்களுடனேயே ஒப்பந்தம் செய்துள்ளேன்; ஜனாதிபதி


எந்தவொரு அரசியல் கட்சியுடனும் ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை ஆனால் நாட்டு மக்களுடன் மட்டுமே நான் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளேன்
என ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
 
கிழக்கு மாகாண ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று திருகோணமலை மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது. அதில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 
 
அவர் மேலும் தெரிவிக்கையில், 
 
 
கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற 3 மாவட்டங்களிலும் மேற்கொள்ளும் அபிவிருத்தியை 100 நாள் திட்டத்தின் கீழ் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என அதிகாரிகளை பணித்தார். 
 
நான் தேர்தலில் போட்டியிடும்  போதும் இன்றும்  எந்தக் கட்சியுடனும் நான் ஒப்பந்தம் செய்துகொள்ளவில்லை. மாறாக நாட்டு மக்களுடனேயே நான் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளேன் என்றார். 
 
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணத்திலுள்ள பாராளுமன்ற அமைச்சர்கள், உறுப்பினர்கள், கிழக்கு மாகாண முதலமைச்சர், சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள், உறுப்பினர்கள், அம்பாறை மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்ட திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.