பக்கங்கள்

பக்கங்கள்

2 ஏப்., 2015

மகிந்த - மைத்திரி இணையும் அறிகுறி


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் எதிர்வரும் நாட்களில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்று இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தொடரப்பட்ட வழக்கு மீதான விசாரணைக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இவ்வாறான சந்திப்பானது வதந்திகளுக்கு முற்றுப்புள்ளியாக அமையும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மிக விரைவல் இந்தப் பேச்சு நடைபெறும் எனவும் பெரும்பாலும் கொழும்பில் இந்த சந்திப்பு இடம்பெறலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.