பக்கங்கள்

பக்கங்கள்

13 ஏப்., 2015

மண்ணெண்ணை பவுஸர் தடம்புரள்வு: வீணாகியதை ஏந்திய மக்கள்

news

வவுனியா ஓமந்தைப் பகுதியில் மண்ணெண்ணை பவுஸர் ஒன்று தடம் புரண்டத்தில் அதில் இருந்த மண்ணெண்ணெய் அனைத்தும் வீணாகியது.

 
வவுனியாவில் இருந்து யாழ். நோக்கி வந்த மண்ணெண்ணை பவுஸரே இவ்வாறு தடம் புரண்டுள்ளது. 
 
 
மேற்படி இவ்விபத்து சம்பவம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
 
 பவுஸரில் இருந்து மண்ணெண்ணெய் வெளியேறியதனால் அருகில் இருந்தவர்கள் மண்ணெண்ணையை தாம் எடுத்து வந்த பாத்திரங்களில் எடுத்துச் சென்றனர்.
 
இதேவேளை சிலமணி நேரத்தின் பின்னர் கனரக வாகனத்தின் உதவியுடன் பவுஸர் வாகனம் மீட்கப்பட்டது.