பக்கங்கள்

பக்கங்கள்

20 ஜூன், 2015

அரசின் செலவில் மகனுடன் 40 வெளிநாடு பயணங்களை மேற்கொண்ட அமைச்சர்


புதிய அரசாங்கத்தின் 100 நாட்களுக்குள் அமைச்சர் ஒருவர் தனது மகனுடன் 40 தடவைகள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் இந்த பயணங்களுக்கான அந்த அமைச்சரின் பொறுப்பின் கீழ் உள்ள அமைச்சு சுமார் ஒரு கோடி ரூபா பணத்தை செலவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக போட்டியிட்ட போது அவருக்கு ஆதரவு தெரிவித்து, இந்த அமைச்சர் கடந்த அரசாங்கத்தில் இருந்து வெளியேறினார்.
இவரது மகன் மாகாண சபை உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.
இவர்கள் ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகள் பலவற்றுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதுடன், எதிர்காலத்தில் சில பயணங்களை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் போது சாதாரண வகுப்பில் பயணித்து வருகிறார்.
எனினும் குறித்த அமைச்சரும் அவரது மகனும் வர்த்தக வகுப்பில் ஆசனத்தை ஒதுக்கி ஆடம்பரமாக பயணம் செய்து வருவதாக கூறப்படுகிறது.