பக்கங்கள்

பக்கங்கள்

27 ஜூன், 2015

புலம்பெயர்வாளர் விழாவுக்கு முன்னர் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்: த.தே.கூட்டமைப்பு


புலம்பெயர்வாளர் விழாவுக்கு முன்னர் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பி அரியநேந்திரன் இந்த கோரிக்கையை இன்று நாடாளுமன்றத்தில் விடுத்தார்.
அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று அரசாங்கம் கூறியபோதும் இன்னும் அவர்கள் விடுவிக்கப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தநிலையில் அரசியல்கைதிகளின் விடுதலையில்லாமல் புலம்பெயர்வாளர்களின் விழாவை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று அரியநேந்திரன் தெரிவித்தார்.