பக்கங்கள்

பக்கங்கள்

24 நவ., 2015

தமிழருக்கான நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என அமெரிக்காவிடம் வலியுறுத்தப்பட்டது - சம்பந்தன்


தமிழ் அரசியல் கைதிகள் உள்ளிட்ட தமிழர்கள் எதிர்நோக்கும் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தர
வதிவிட பிரதிநிதி சமந்தா பவரிடம் கலந்துரையாடப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிட பிரதிநிதியுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் கருத்து தெரிவித்தார்.
அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை தொடர்பான தீர்மானம் முழுமையாக நிறைவேற்ற மனித உரிமை பேரவை மற்றும் அமெரிக்கா தமது கடமைகளை முறையாக பேண வேண்டும் என இன்றைய சந்திப்பின் போது வலியுறுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, வட மாகாணத்தில் இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும் எனவும் அமெரிக்காவிடம் வலியுறுத்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.